களுத்துறை, அளுத்கம பகுதியில் திங்கட்கிழமை காலை நச்சுப் பழம் ஒன்றை உட்கொண்ட 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹிம்புட்டு’ என்ற பழமென நினைத்து உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு களுத்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; அளுத்கம காட்டுப் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் சென்றுள்ளனர்.
