Neruppu Headlines

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ கிழக்கு மாகாணசபை தீர்மானம்!

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதென கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கிழக்கு மாகாணசபை கூட்டம் நேற்றையதினம் இடம்பெற்றபோதே இவ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோதல்கள் இடம்பெறும் கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்க அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என்று கிழக்கு மாகாணசபை முடிவெடுத்துள்ளது.

கிழக்கில் ஒரு இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயத்தை ஊக்குவிக்க மாகாண அரசு நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயக செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் விவசாய நிலங்களில் விவசாயத்தினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்-ஆனந்தசங்கரி!

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் யார்?

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும்-ஆனந்தசங்கரி!

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அண்மையில் இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலால் ஒன்றரை வயது குழந்தையை பலி கொண்டதோடு 18 அப்பாவி பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதாகவும், சில வீடுகள் சேதத்துக்குள்ளானதாகவும் அறிய வருகிறது. இதேபோன்ற சந்தர்ப்பத்தில் ஒரு குழந்தையை அல்லது தமது உறவினர் ஒருவரை இழப்பவர்களாலேயே இந்த இழப்பின் வேதனையை உணர முடியும்.

வெள்ளவத்தை மைய+ரபதி ஆலயத்தின் தீர்த்ததிருவிழா!

கொழும்பு வெள்ளவத்தை மைய+ரபதி ஆலய தீர்த்த திருவிழா வெள்ளவத்தை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் கடத்தல், காணமலபோதல், படுகொலை என்று புலிகளின் ஊடகங்கள் மிகைப்படுத்திய பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை அச்சப்படுத்தி வரும் நிலையில், மேற்படி ஆலயத்தின் தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

தமிழகத்திற்குள் புலிகள் ஊடுருவல்: கைது செய்யப்பட்ட புலிகளின் தகவலில் மேலும் பலர் கைது!

புலிகள் இயக்கத்தின் கடல் பிரிவு, உளவுபிரிவு, விற்பனை பிரிவுகளில் பணியாற்றும் 50க்கு மேற்பட்ட புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகர் பகுதியில் புலிகள் மற்றும் அவர்களது முகவர்கள் இயக்கத்திற்கு தேவையான வெடிபொருட்களை கள்ளத்தோணியில் இலங்கைக்கு அனுப்பிவரும் அதிர்ச்சி தகவல் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

புலிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்கா ஆதரவு! (US supports crackdown on LTTE)

புலிகளை முற்றாக இல்லாது ஒழிப்பதற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவினை வழங்குமென இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க உயர் மட்ட அதிகாரியான ரிச்சேட் பவுச்சர் (Richard Boucher) தெரிவித்துள்ளார். புலிகளை ஒடுக்குவதற்கு இலங்கை அரசிற்கு அமெரிக்கா எப்பொழுதும் ஆதரவாக இருக்கும், அதேவேளை மனித உரிமைகள் மீறல் விடயத்தில் அரசு அக்கறை காட்டவேண்டும் என அவர் அரசினை வலியுறுத்தி உள்ளார்.

புலிகளின் முக்கிய புள்ளி தம்பியண்ணா தமிழகத்தில் கைது!

கிளிநோச்சியில் இருந்து அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தாக நம்பப்படும் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்ட நாள் உறுப்பினருமான 46 வயதுடைய தம்பியண்ணா இன்றையதினம் (2008-07-30) சென்னையில் வைத்து கியு பிரிவின் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் எங்கு வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார் ,எப்படி இவர்களுக்கு தகவல் கிடைத்தது என்பது குறித்து இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஏட்டின் நிருபர் கேட்டமைக்கு கியு பிரிவு அதிகாரிகள் அந்த விபர

புலிகளின் முக்கிய புள்ளி தம்பியண்ணா தமிழகத்தில் கைது!

கிளிநொச்சியில் இருந்து அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தாக நம்பப்படும் புலிகளின் உயர்மட்ட மற்றும் நீண்ட நாள் உறுப்பினருமான 46 வயதுடைய தம்பியண்ணா இன்றையதினம் (2008-07-30) சென்னையில் வைத்து கியு பிரிவின் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் எங்கு வைத்து இவர் கைதுசெய்யப்பட்டார் ,எப்படி இவர்களுக்கு தகவல் கிடைத்தது என்பது குறித்து இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில ஏட்டின் நிருபர் கேட்டமைக்கு கியு பிரிவு அதிகாரிகள் அந்த விபர

கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது தாக்குதல்!

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்திருந்த வன்னிபுலிகளின் கரும்புலிகள் படைப்பிரிவின் பயிற்சி முகாம் மீது நேற்றுக்காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ள இரணைமடு பகுதியில் அமைந்திருந்த கரும்புலிகளின் பயிற்சி முகாம் மீது நேற்று காலை 6:30 மணியளவில் விமானப்படை ஜெற் விமானங்கள் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் எதிர்காலம் என்ன?

என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கனடா ரொறன்டோவில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஞாயிறு 17 ம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்சியில் Amnesty International Canada வின் இலங்கை கோடினேட்டர் ஆன John Argue , மற்றும் கலாநிதி Ratnajeevan Hoole ,Rensselaer Polytechnic Institute,USA ஆகியோர்கள் கலந்து கொள்ளுகின்றனர்.

நீதிமன்றத்துக்குள் உட்புக முயன்ற சிங்கள இளைஞனிடம் புலிகளின் அடையாள அட்டை!

நீதிமன்ற வளவுக்குள் பிரவேசிக்க முயன்ற சிங்கள இளைஞர் ஒருவரை நீதிமன்ற பகுதியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது அவரிடம் புலிகள் இயக்கத்தால் அவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 21 ஆம் திகதி அநுராதபுரம் நீதிமன்ற வளவுப் பகுதியில் நடந்துள்ளது.

மடு கோயிலை பொறுப்பேற்குமாறு இராணுவம் கோரிக்கை!

புலிகளிடமிருந்து இராணுவத்தினரின் வசமாகிய மடுக்கோவிலில் ஏற்பட்டிருந்த சேதங்களைச் சீர்செய்துள்ள இராணுவத்தினர், அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை ஆகிய இருவரையும் நேற்று அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

தொடரும் வன்னிமீதான இராணுவ நடவடிக்கை!

வன்னி மீது தொடரும் இராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக மல்லாவி தெற்கு, துணுக்காய் கிழக்கு கிழக்கு பகுதிவரை படையினர் முன்னேறியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. துணுக்காய் சிவன் கோயில் பகுதிவரை இராணுவம் தற்போது முன்னேறியுள்ளதுடன் நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ராதகிருஷ்ணன் ஆகியோருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் வி.இராதகிருஷ்ணன் ஆகியோரிற்கு மூன்று வருடகாலம் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் யோகராஜா தெரிவித்துள்ளார்

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் வன்னிபுலிகள்?

விடத்தல் தீவு, வவுனி;க்குளம், மல்லாவி வரை முன்னேறியுள்ள படையினரை ஊடறுத்து பாரிய தாக்குதல் மேற்கொள்ளும் முஸ்தீபுகளில் வன்னிபுலிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளால் கடந்த காலங்களில் மேற்கொண்டது போன்று பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு இராணுவத்தினரின் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது உள்ளது.

புலிகளின் தலமையினை காப்பாற்ற எமக்குள் ஒற்றுமை வேண்டும்-புலிகளின் வெளிநாடு தலைவர்கள்!

புலிகள் விடத்தல் தீவினைவிட்டு விட்டார்கள், மல்லாவியில் மலைத்து நிற்கின்றார்கள்,ஆனால் புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஊடகங்களில் மட்டும் இவ்வைகையான செய்திகள் இன்னமும் வரவில்லை,கனடா நாட்டில் ஐந்திற்கு மேற்பட்ட வானொலிகள் அவைகளுக்கு வட கிழக்கு எங்கும் நிருபர்கள், ஆனால் எவருக்கும் இந்த செய்திகள் எட்டவில்லை.இந்த ஊடகங்களை மட்டும் நம்பி இருப்பவர்களுக்கு கிழக்கு இன்னமும் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது என எண்ணியவாறு இருப்பார

வவுனியாவில் கரும்புலிகளின் இடுப்புபட்டி மீட்பு!

வவுனியா பட்டைக்காடு பகுதியில் இருந்து வன்னிப்புலிகளின் கரும்புலிகள் பாவித்துவரும் இடுப்புபட்டி ஒன்று நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் தேடுதல் மேற்கொண்ட படையினர் நேற்று மதியம் 12:40 மணியளவில் பட்டைக்காடு பகுதியில் இருந்து மீட்டுள்ளனர்.

பாலமோட்டையில் அரச படைகளின் முன்னகர்வு புலிகளினால் முறியடிக்கப் பட்டுள்ளது !

வவுனியாவில் உள்ள பாலமோட்டை பகுதியில் அரச படைகள் தரைவழி முன்னகர்வினை மேற்கொண்ட போது அதனை முறியடித்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர். திங்கட் கிழமை பிற்பகல் கடுமையான ஏறிகணைதாக்குதலை மேற்கொண்டு விட்டு படையினர் புலிகளின் கட்டுப்பாடு பிரதேசத்திற்குள் முன்னேற முயன்றவேளை புலிகள் மறுதாக்குதலை மேற்கொண்டு அவர்களின் முன்னேற்றத்தினை முறியடித்துள்ளதாக புலிகளின் ஆதரவு ஆங்கில இணைய தளமான தமிழ் நேற் தெரிவித்துள்ளது.

அரசியல் தீர்வினை முன்வைப்பதிலும் அரசு தீவிரம் காட்டவேண்டும் - புளொட் தலைவர் சித்தார்த்தன்!

அரசு புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி காண்பதற்கு காட்டுகின்ற தீவிரத்தினை உரிய அரசியல் தீர்வினை காண்பதிலும் காட்ட வேண்டும் என புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தற்பொழுது இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டு சகல மட்ட அரசியல் தலைவர்களையும் சந்த்தித்து பேச்சுக்களை நிகழ்த்தி வரும் ஐயிரோப்பிய பிரதிநிதிகளை கடந்த வெள்ளிகிழமை சந்தித்து பேச்சுக்களை நிகழ்த்தும் போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும்- ஜனாதிபதி!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்கான தாக்குதல்களை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இதனால் விடு முறையில் சென்றுள்ள இராணுவத்தினர் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். வரத் தவறுபவர்கள் மீது இராணுவ நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது கூறினார்.

நெருப்புக்கு வந்த மடல் - ஐயா பொன்னையா என்னையா!

ஐயா. பொன்னையா. என்னையா. எந்த உலகத்தில் ஐயா நீவிர் இருக்கின்றீர்? புல்லுருவிகளைக் களை எடுக்க வேண்டும் என்கிறீரே பலே கில்லாடி ஐயா. நீவிர்?

இலுப்பைக்கடவையில் வாகனங்களை கைவிட்டுவிட்டு தப்பியோடும் வன்னிபுலிகள்!

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையின் தொடர் நடவடிக்கையாக இன்று காலை இலுப்பைக்கடவை சிறு நகரை படையினர் கைப்பற்றியுள்ளனர். விடத்தல் தீவில் இருந்து 19 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலப்பைக்கடவை பகுதியில் நிலை கொண்டிருந்த வன்னிபுலிகள் தாம் பாவித்து வந்த வாகனங்களை கைவிட்டுவிட்டு தப்பியோடி வருகின்றனர்.

புலிகளின் பிடியில் இருந்த இலுப்பக்கடவை பகுதியும் விடுவிப்பு!

மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பிடியில் இருந்த இலுப்பக்கடவை பகுதியும் விடுவிப்பு!

மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து வடக்கே அமைந்திருந்த இலுப்பக்கடவை பகுதியை படையினர் இன்று காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதியில் அமைந்திருந்த மேற்படி இலுப்பக்கடவை தளம் புலிகளின் முக்கியமான தளம் என்றும், இங்கே கடற்புலிகளின் தளம் இல்லை என்றும், இவ் பகுதியில் புலிகள் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இவ்பகுதியை பாவித்து வந்துள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.