இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் விஜயன்(25). இலங்கையிலிருந்து இரண்டு இன்ஜின் பொருத்திய பைபர் படகில் தேவிபட்டினம் அருகே தென்னம் பண்ணை கடற்கரைக்கு நேற்று வந்தார். அங்கு தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூடைகளை படகில் ஏற்றிக்கொண்டிருந்தார். ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ரோந்து சென்ற போலீசார் விஜயனை பிடித்து படகில் இருந்த மூடைகளை பிரித்து பார்த்தனர்.
