பிரித்தானியாவில் இருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின் பேரிலும்தான் இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை இன்று வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாக தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறியனார். இருந்த போதிலும் தமது அமைப்பு இந்த தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். அதேவேளை கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாத்க தெரிவித்த முதலமைச்சர் பிள்ளையான் அவர்கள், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால், பின்னர் கருணாவைச் சந்திப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
